மும்பை மராத்தியர்களுக்குத்தான் உரிமையானது - மகிழ்நன்
இப்படிச் சொல்ல எனக்கென்ன தகுதியிருக்கிறது என்றால், மும்பையில் பிறப்பிலிருந்து 25 ஆண்டுகள் வசித்திருக்கிறேன். மராத்தியர்களே என் பதின்வயது தொடங்கி முடியும்வரை நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், என்னுடைய பிறப்பு சான்றிதழ் மும்பையில் பிறந்ததாகத்தான் இருக்கிறது. மும்பையில்தான் எனது கல்வியை முடித்திருக்கிறேன். இம்மண்ணின் மொழியாகிய மராத்தி உட்பட ஓரளவு சரளமாக கற்றிருக்கிறேன். ஆக, நான் மண்ணின் மைந்தனாக இல்லாவிட்டாலும் இம்மண்ணில் நீண்ட கால விருந்தினன் என்ற முறையில் என்னுடைய கருத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இதுதான் என் நன்றிக்குரிய செயலாக இருக்கும் என்று கருதி இந்த பதிவை வெளியிடுகிறேன்.
இங்கே இரண்டே செய்திகள்தான் விவாதிக்கப்பட இருக்கிறது..........
ஒன்று மும்பை மராத்தியர்களுடையது என்ற வாதம்.............
மற்றொன்று மும்பை மராத்தியர்களுடையதே என்ற வாதம்............
இங்கே மொழிப்போர் நடத்திய பெருமை கொண்ட தமிழர்களின் குரலும் ஒலித்திட வேண்டும்.............யார் பக்கம்? என்பது தலைப்பிலேயே தெரிந்திருக்கும்.....
மும்பை இந்தியர்களுடையதா?
இந்தியா என்று கூறப்படும் கூட்டமைப்பிற்கு உள்ளிட்ட பகுதிகளில் எப்பகுதிகளிலும் சென்று வாழலாம், தொழில் தொடங்கலாம்........என்றெல்லாம் பரந்த மனப்பான்மையோடு கூறப்படுவது போன்ற உருவகம் தரக்கூடிய சொற்களை, வாதத்தை..........
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று கூறிய தமிழ்பாட்டனாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் மறுத்து கூறுகிறோம்,
“மும்பை இந்தியர்களுடையதல்ல........”
இந்தியர்களுடையதா இல்லையா என்று தீர்மானிக்கும்முன் இங்கே வீற்றிருக்கும் அரசுகளும், அரசியல் கட்சிகளும் முதலில் இந்தியர்கள் யார்?என்ற கேள்விக்கு பதிலளிக்கட்டும்....
இந்தியர்கள் யார்?
உழைக்கும் மக்களா? சுரண்டும் பெருமுதலாளிகளா?
யாருக்கான நாடாக இந்நாட்டை 60 ஆண்டுகளில் கட்டியமைத்திருக்கிறார்கள்.........?
உழவன் ஒருபுறம் தற்கொலை செய்து கொண்டு சாக, மறுபுறம் தன் மனைவிக்கு ஹெலிகாப்டர் வாங்கி பரிசளிக்கும் பெருமுதலாளியின் இருப்பு இந்திய போலி தேசியத்தில்...எப்படி சாத்தியமானது?
இந்தியர்கள் அனைவருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உரிமை உண்டென்று கொஞ்சம்கூட பொது அறிவில்லாது ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.........
ஒரே ஊரில் வசித்தாலும், தாழ்த்தப்பட்டவனுக்கு ஆதிக்கச்சாதிக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் சுதந்ததிரமாக நடமாட உரிமை இன்றளவும் மறுக்கப்படுகிறதே? சேரிகள் இந்தியாவில் இல்லையா? அல்லது......சேரிகளிலிருந்து ஆதிக்கச்சாதிகள் வசிக்கும் தெருவுக்கு ஏதேனும் கடவுச்சீட்டு வழங்கும் சட்டவரைவு கொண்டுவரப்பட இருக்கிறதா?
இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்று விளக்கி, விளக்கி அந்த சொற்கள் தேய்ந்து விடும் அளவுக்கு விளக்கிவிட்டனர்..
கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், இந்தியா என்னும் நாடு வேற்றுமை பாராட்டுவதில் ஒற்றுமை காண்கிறது அவ்வளவே.........
சாதி, மதம், வர்க்கம் என ஒடுக்குமுறைகளின் முன்மாதிரிதானே இந்தியா.............
சாதிய பேதமில்லா, மத பேதமில்லாம், வர்க்க பேதமில்லா நாடாக இந்தியா என்றாவது விளங்கியிருக்கிறதா?
ஆண்டாண்டுகாலமாக உழைத்து ஓடாய் தேய்ந்துபோன உழைப்பாளிக்கு உரிமையில்லாத நாடு வந்தேறிகளுக்கும் , அடிவருடிகளுக்கு சொந்தமானது என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொண்டு விடுதலை நாளில் மிட்டாய் வாங்கி சப்பிக் கொண்டு போவதுதான் நாம் இந்த தேசியத்திற்கு செய்யும் நன்றிக்கடனாகுமோ.....?
சொந்த நாட்டு மக்களின் மீது நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை பயன்படுத்தி Operation Green Hunt என்ற பெயரில் கொல்லத்துடிக்கும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் ஆட்சி செய்யும் நாடு நமதானதாக இருக்க முடியுமா?
சரி......மும்பை மராத்தியர்களுடையதா?
ஆம், மும்பை மராத்தியர்களுடையதுதான்....
ஆனால், இதை பேசும் தகுதி சிவசேனை, மராட்டிய நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகளிடம் இருக்கிறதா?
மும்பையில் வாழும் மராத்தியர்கள் தங்கள் தாய்மொழியில் அடிப்படை கல்வியிலிருந்து, மேற்கல்வி வரை கற்க நடைமுறைப்படுத்திவிட்டது போல் குதிக்கின்றன இந்தக்கட்சிகள். இத்தனை ஆண்டு காலம் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதற்கு வடிகாலாக வாக்குச்சீட்டை பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதை தமிழகத்து திமுகவிடமிருந்து கற்றுக் கொண்டதோ என்னவோ? இன்றும் அதே ஆயுதத்தை பயன்படுத்தி மீண்டுமொருமுறை ஆட்சிக்கு வர துடிக்கிறது இது போன்ற கட்சிகள்.........(இதில் கருணாநிதி சிவசேனையை கண்டித்திருப்பது நகைமுரண்).
மராத்தியர்களை மராத்தியர்களாக தங்களை சிந்திக்கவிடாமல் ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் பிள்ளைபோல் மராத்தியர்களுக்கு மொழிவுணர்வையும் மீறி மதவுணர்வை தூண்டிவிட்டுவிட்டு, இன்று குதிப்பதற்கு ஏதாவது தகுதியிருக்கிறதா?என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதில்............
சுறுக்கமாக கூறினால், மும்பை மராத்தியர்களுடையதுதான், அதை பேசும் தகுதிதான் சிவசேனைக்கு இல்லை. பக்குவமாக சிந்திக்க தெரிந்த மக்கள் நல இயக்கங்கள் இது போன்ற உரிமைச்சார்ந்த பிரச்சினைகள் கையிலெடுத்தால் கண்டிப்பாக ஆதரிக்கலாம், மதவாதம் பேசும் சிவசேனையை வெகுமக்கள் நலனில் அக்கறை கொண்ட நம்மால் ஆதரிக்க முடியாது என்பதே நம் நிலைப்பாடு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக