ஜெயராம் மட்டும்தான் பெண்களை அவமானப்படுத்தினாரா?
பிரபல நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சைட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.
இந்நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சியின் 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் ? " என்றார்.இது அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.”(வெப்துனியா)
மேற்கண்ட செய்தி பரவியதும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய வீடும் தாக்கப்பட்டது. அதை தொடர்ந்து “நாம் தமிழர்” இயக்கத்தை சார்ந்த தோழர்கள் 16 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகளும் வெளியாகியிருக்கிறது. அதோடு நிற்காமல் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது கைது நடவடிக்கை ஏவப்பட உள்ளதாகவு மேற்கொண்டு செய்திகள் தெரிவிக்கின்றன(நாம் தமிழர் இணையம்)
பின்னர் சூழலின் தீவிரத்தை உணர்ந்து நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்டார்.............
ஜெயராம் மீதும் வழக்குப்போடப்பட்டிருப்பதாக செய்திகளை இணையங்களில் கண்டோம்....
நடிகர் ஜெயராமின் அந்த கேவலமான சொற்கள் கண்டிக்கத்தக்கவைதான்.......ஆனால் , ஜெயராம் மட்டுமா கண்டிக்கத்தக்கவர்.......
மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த விடயங்களை என் புரிதலுக்குட்பட்டு சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்..... -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நம் தமிழ் இளைஞர்கள், தமிழ்தாய்மார்கள் மீது அளவில்லா மதிப்பு வைத்திருக்கிற இனவுணர்வுள்ள இளைஞர்கள் வரவேற்கும் அதே வேளையில், மேற்கொண்டும் பெண்களை இழிவுப்படுத்தும் போக்கை கடைபிடிக்கு மற்ற துறைகளையும் கண்டித்து, எதிராக களம் காண வேண்டிய தேவையிருக்கிறது............
பெண்களை இழிவுப்படுத்தும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு பெண்களை இழிவுப்படுத்தும் முன் சிந்தித்து சொற்களை உதிர்ப்பார்கள் என்று அந்த நடிகரிடம் மட்டுமல்ல சமூகத்தில் வாழும் சாமானிய மனிதன்வரை எவனிடமும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை...ஏனென்றால் அவர் சார்ந்திருக்கும் துறை அத்தகையது. ஆணாதிக்க துறை(சமூகம்).
திரை ஊடகம்
பெண்களை இழிவுப்படுத்துவதில் இன்று வலுவான முதல் ஊடகம் இதுதான். பெண்ணின் அங்கங்களை சமூகத்தில் காட்சி பொருளாக்கி விற்பதில் முதலிடத்தில் இருப்பது இதே ஊடகம்தான்.....
பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றத்தை
“சக்கரவள்ளி கிழங்கு நீதான் சமஞ்சது எப்படி” “மாசி மாசம் ஆளான பொண்ணு” என்று பெண்ணின் உடலை கூவி விற்கும் பாங்கு........
“சின்னவீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா?”என்று வீடு கட்டி ரியல் எஸ்டேட் பாணியில் விற்றது............
“டேடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாருமில்லை............(வில்லு)”என்று வரம்புமீற அழைப்பது............(இதில் கொடுமை என்னவென்றால் 5 வயது குழந்தைகள் பள்ளிக்கூட விழாக்களில் இதே பாடல்களுக்கு ஆடுகின்றனர்)
“பள்ளிக்கூட ஸ்நேகம், பள்ளியறை பாய் வரை போகும் யோகம்” (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்)
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே என்று பெண்ணுக்கு உடை உடுத்த பாடம் எடுத்ததுவரைக்கும்.........
கருத்துள்ள(?) பாடல்களை தந்து பெண்களை இழிவுப்படுத்துவதில் ஜெயராமுக்கு முன்னோடிகள், நம் திரை கண்ணாடிகள்...........
பாடல்களில் மட்டும்தானா என்றால் வசனங்களில் இவர்களின் ஆபாசத்துக்கு, ஆணாதிக்க வக்கிர புத்திக்கு அளவில்லை...
பொம்பளை சிரிச்சா போச்சு...........
நான் நினைச்சா ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண்ணோட வாழ்வேன்( பிரியமானவளே)
அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்ந்ததா சரித்திரமில்லை..........
என்று கோபப்படுவதற்கு கூட ஆண் என்ற அடையாளத்துக்கு பட்டாஎழுதும் திரைத்துறையை கண்டித்தும்...........
சின்னத்திரை ஊடகங்கள்
பெண்ணை வக்கிர புத்திக் கொண்டவளாக, கண்களின் க்லிசரின் சுரப்பிகள் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும் பிறவிகளாக, சித்தரித்து உருவாக்கப்படும் குறும்(?), நெடுந்தொடர்கள் ஆகியவற்றிற்கு எதிராக..............
விளம்பர படங்கள்
விளம்பர படங்கள் என்ற போர்வையில்
தமிழ்நாட்டு பெண்களின் உள்ளத்தில் கருப்பு கீழானது என்று உளவியல்ரீயாக தாழ்வு மனப்பான்மையை விதைக்கும் முகப்பூச்சு விளம்பரங்கள் தொடங்கி..........ஆணின் உள்ளாடை விளம்பரத்துக்கு கூட பெண்ணை உள்ளாடையோடு நடமாடவிட்டு இளைஞர்களின் உள்ளத்தின் பெண்ணின் மீதான வக்கிர சிந்தனையை தூண்டிவிடும் விளம்பர நிறுவனங்களை கண்டித்தும்.............
களமிறங்க வேண்டிய கொள்கை தெளிவு நம் இளைஞர்களுக்கு வர வேண்டும்......
ஆனால், ஆணாதிக்க பிற்போக்கு தனத்திற்கு இந்த ஊடகங்கள் மட்டும்தான் காரணமா? மக்களுக்கேற்ற மகேசன் போல, ஆணாதிக்க சமூகத்தின் பிம்பமாகவே நிலவும் இந்த ஊடகங்களை கண்டித்து களமிறங்கும் நாமும் நம்மை கொஞ்சம் ஆய்வு செய்து கொள்ள வேண்டாமா?
ஒரு ஆணும், ஆணும் சண்டையிட்டு கொள்ளும் பொழுது வசைப்பாட பயன்படுத்தப்படும் கொச்சையான சொற்கள் ஏதாவது ஆணை திட்டுவதாக வருகிறதா? வசைப்பாடும் ஆண் எதிரிலிருக்கும் ஆணின் சகோதரி, தாய், மனைவி என அவர்களைத்தான் திட்டி தன் ஆண்மையை(?) நிருபிக்கிறான். இதுதானே நம் வழக்காக இருக்கிறது...
எ.கா:ஆணின் துணிவை உரசிப்பார்க்க..........ஆணை போடா பொட்டை என்று திட்டினால் போதும்...உடனே இவருக்கு துணிவு பொத்துக் கொண்டு வந்துவிடும்....(சமூகத்தில் தாழ்ந்த சாதியாக கருதப்படுகிற சாதியின் பெயரை கொண்டு திட்டினால் எப்படி சாதிய திமிரோடு ஆதிக்கசாதியாக கருதிக் கொள்ளும் அன்பர்களுக்கு கோபம் வருகிறதோ, அதே சூழலை இங்கே பொறுத்தி பார்த்தால் தவறில்லை என்று நினைக்கிறேன்)
ஆக, நாம் எதிர்த்து களமாட வேண்டியது விரிவான பார்வையில்.................பெண்களின் கருத்துக்களுக்கும் கொஞ்சம் செவிப்படுத்து,
நம் இளைஞர்கள் நடுவில் நிலவும் ஆணாதிக்க பிற்போக்குத்தனத்தை
மாற்றிக் கொள்ளாமல்............ஜெயராம் போன்ற பிரபல ஆணாதிக்க பிற்போக்குவாதிகளை கண்டிக்கும் தகுதி நமக்கு உண்டா?
ஊரை திருத்துவதற்கு முன் நாம் கொஞ்சம் நம்மை திருத்துவோம்.........
பெண்களை நுகர்வு பாண்டமாக கருதுவதை ஒழித்து சக மனுசியாக பார்க்க பழகுவோம்...
தமிழின ஜெயராம்களையும் கொஞ்சம் கவனித்தில் கொண்டு திருத்த முயல்வோம்
---------------------------------------------------------------------------------------------------
அதோடு நாம் இங்கே நம் தமிழ் உணர்வாளர்கள், தமிழச்சிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமானத்தையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்......
இந்த இணைப்பை அழுத்திப்பாருங்கள்
http://thatstamil.oneindia.in/news/2010/02/07/lack-communication-skill-grounds-sc.html
பெண்கள் கருப்பானவர்கள், குட்டையானவர்கள் என்று சொல்லி விமானப்பணிப்பெண் நேர்காணலின்பொழுது நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்...........இது தமிழச்சிகளுக்கு நேர்ந்த அவமானமில்லையா?
வெள்ளைத்தோல்தான் அழகு என்று கருதிக் கொண்டு எம் இன பெண்களை இழிவுப்படுத்த இந்த பண்டார கூட்டத்திற்கு எவன் கொடுத்தது அதிகாரம்....
ஆப்ரிக்க நாட்டில் நிறத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் யாரையும் விமான பணிப்பெண் வேலைக்கு நிராகரிக்கிறார்களா, என்ன?