காந்தியின் உளரல்கள்...............
இந்தியா எனும் மாயையில் சிக்கித்தவிப்பவர்களெல்லாம் தூக்கிப்பிடிக்குமளவுக்கு, காந்தியார் ஒன்றும் புனிதமானவரில்லை என்பது உண்மைதான்.
”விடுதலைவீரர்” “ அஞ்சாநெஞ்சன்” நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களை, வெள்ளையர்களிடம் ஒப்படைப்பதாகச் சம்மதக்கையொப்பம் இட்டவர்தான் இவர்.
எனினும் , ஆதாரமில்லாத் விடயங்களை வைத்துக் குற்றஞ்சாட்டுதலைத்தவிர்த்துக்கொள்ளல் நல்லது என்று நினைக்கிறேன்.
காந்தியின் பெண்கள்
விக்கிபீடியா மூலமாகவும் ரிச்சர்ட் அட்டன்பரோ மூலமாகவும் மட்டுமே காந்தியை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஏற்படுத்தியிருக்கிறது.
காந்தி இப்படிப்பட்டவராக இருப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை, it's shocking என்கிற ரீதியில் சிலர் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை புரிந்துள்ளனர். ஒப்பற்ற உன்னத தலைவர் என்றல்லவா எண்ணியிருந்தோம் என்று சிலர் திகைத்திருக்கிறார்கள். சிலர் சீறியிருக்கிறார்கள். நாம் அதிகம் மதித்த ஒரு நபர் என்பதற்காகவே அவர் மீது இப்படி சேறு பூசலாமா? மற்றவர்கள் செய்யாததையா இவர் செய்துவிட்டார்? சிலர் காந்தியைத் தாங்கி பிடித்திருக்கிறார்கள். அவர் சொன்னதில் என்ன தப்பு? அபத்தமாக எதையும் அவர் சொல்லிவிடவில்லையே!
பெண்கள் பற்றி காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன? இதுதான் கட்டுரையின் சாரம். மூன்று விஷயங்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.
2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.
3) ஒரு தகப்பன், தன் குடுமபத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.
இந்தக் கடைசி கருத்தை மட்டும் போனால் போகட்டும் என்று பிற்காலத்தில் சற்றே தளர்த்திக்கொண்டிருக்கிறாராம் காந்தி.
கட்டுரையின் கடைசி வரி இது. நினைவிருக்கட்டும். புனிதர் என்று யாரும் இங்கே இல்லை.
யாரோ ஒரு Michael Connellan ஏதோ ஒரு நாட்டில் இருந்துகொண்டு எதையோ சொன்னால் அதை எப்படி நம்புவது என்று சிலர் கேட்கலாம். காந்தியின் படைப்புகளில் இருந்து அவர் எழுத்துகளிலேயே இந்தக் கருத்துகளைத் திரட்டித்தர முடியுமா என்று பார்க்கிறேன்.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக