லஞ்சம் , லஞ்சம் , ஊரெல்லாம் லஞ்சம்
![]() ![]() ![]() ![]() லஞ்சம், பெட்ரோல் விலை இவை இரண்டையும் எந்த ஒரு நாடு கட்டுக்குள் வைத்திருக்கிறதோ அது தானாகவே முன்னேறிவிடும். லஞ்சம் எங்கே ஆரம்பமாகிறது ? (இப்ப எல்லாம் பிறக்கும் போதே லஞ்சம் குடுத்து தான் பிறக்க வேண்டி உள்ளது , எல்லா அரசு பொது மருத்துவமனைகளிலும் லஞ்சம் குடுத்தால் தான் பிரசவம் பார்கிறார்கள் ) . நமது தேவைகள் அவசரமாகும் போது . உதாரணமாக, நமக்கு ஓட்டுனர் உரிமம் , கடவுச்சீட்டு ( அட தூய தமிழ், மங்கு அசத்துடா ) இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . அதுமட்டும் அல்லாது அரசு கேட்டுக்கும் சான்றிதல்கள் தர இயலாதவர்கள் இன்னும் அதிகமாக லஞ்சம் கொடுக்க முன் வருகிறார்கள். இப்பொழுது அரசு அதிகாரிகள் மட்டுமல்ல , மக்களும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். எங்க ? ஏன் ? எதற்கு ? எப்படி ? (நிறுத்து நிறுத்து , ஏன் இந்த டென்சன் கோபம் ) ஒட்டு போடத்தான் . இருபது கோடி செலவு செய்து வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர் , என்ன செய்வார் ????????? ( ம் ம்ம்ம்ம்.... தெருவுல நாய் குறைக்கும் போது , பக்கத்து கோயில்ல உண்ட கட்டி வாங்கி சாப்புடுவாறு) இவற்றை சரி செய்ய என்ன வழி? (ஒன்னியும் பன்னமுடியாது .) சட்டத்தை கடுமையாக்கனும். அது அவ்வளவு சாதாரணமாக முடியாது , ஏன் ? வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும் , நமக்கு பிறந்ததிலிருந்து உணவு , உடை , தங்குமிடம் , பாசம் அனைத்தும் தானாகவே கிடைத்து விட்டன , வளர, வளர நாகரீகம் சொல்லிக்கொடுக்கப்பட்டு எது சரி , எது தவறு , எது குற்றம் என்பது தெளிவாக சொல்லிகொடுக்கபடுகிறது .நமக்கு இந்த கடுமையான சட்டங்கள் பொருந்தும் . ஆனால் ????? சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்........ பசி, பசி ,பசி ??? முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது ) இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ??????? லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ?????? எனவே ஆணிவேரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது ஏன் கருத்து , உடனடியாக முடியாது மிக நீண்ட காலம் ஆகலாம் , அனால் இப்பொழுதே அந்த வேலை ஆரம்பிக்க படவேண்டும் , வேறு யார் அரசாங்கம் தான் .அதை யார் செய்வது ? எந்த அரசாங்கம் ? தொகுதிக்கு இருபது கோடி செலவு செய்து வெற்றி பெரும் அரசு. ஏன் இருபது கோடி செலவு செய்கிறார்கள் ? நம்ம மக்கள் லஞ்சம் கேட்பதால். (பாஸ் முன்னாடி தான் பாஸ் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் , இப்ப எல்லாம் மக்களே கேட்க ஆரம்பிச்சுடாங்க ) பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ? ....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை - மங்குனி அமைச்சர் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக