வியாழன், 20 மே, 2010

லஞ்சம் , லஞ்சம் , ஊரெல்லாம் லஞ்சம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEVFdgUpO4TZ6kEnG54zc4G-joMZImVIocM4qoX675QB2NGsyLHYKfkyA2bV1lEUpaqlNqPWAAQaAuOSbiVMxyz-H5lWpnuccS6-Is8zvLgxnGGzfI-7tPRYgSQzAJvvtAFa0zcjlyZSyh/s320/lanjam+pen.jpghttp://2.bp.blogspot.com/_eBi5s6EFNuI/StLr_BvJOII/AAAAAAAAAQs/aQi2Pnff2U8/s320/mumbai_police_taking_bribes.jpg
http://inioru.com/wp-content/uploads/2009/09/lansam.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzmNBtBi1BuFic6dis1rJRN2hrCOu3CcmHBEBOHBw7gbtoJ3JHAJoliwnbXqZMfX1W-xV5UWdUMddqDeB6p0V1kbrdImY_1Mxq2cvRtBevsS13QYr5rC_5Y6QS0hLUTF6-afR5J2iHKRCt/s400/tblkutramnews_73374575377.jpgகனவு , ஒரு நாள் நிஜமாகும் ..... என்கிற தலைப்பில் பட்டாப்பட்டி ஒரு பதிவு போட்டு அவருக்கு நம் சமுதாயத்தின் மேல் உள்ள கோபத்தை மிக காட்டமாக கூறியிருந்தார் .....

அதை பற்றி எனது கருத்து......

லஞ்சம், பெட்ரோல் விலை இவை இரண்டையும் எந்த ஒரு நாடு கட்டுக்குள் வைத்திருக்கிறதோ அது தானாகவே முன்னேறிவிடும்.

லஞ்சம் எங்கே ஆரம்பமாகிறது ? (இப்ப எல்லாம் பிறக்கும் போதே லஞ்சம் குடுத்து தான் பிறக்க வேண்டி உள்ளது , எல்லா அரசு பொது மருத்துவமனைகளிலும் லஞ்சம் குடுத்தால் தான் பிரசவம் பார்கிறார்கள் ) .

நமது தேவைகள் அவசரமாகும் போது . உதாரணமாக,
நமக்கு ஓட்டுனர் உரிமம் , கடவுச்சீட்டு ( அட தூய தமிழ், மங்கு அசத்துடா ) இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . அதுமட்டும் அல்லாது அரசு கேட்டுக்கும் சான்றிதல்கள் தர இயலாதவர்கள் இன்னும் அதிகமாக லஞ்சம் கொடுக்க முன் வருகிறார்கள். இப்பொழுது அரசு அதிகாரிகள் மட்டுமல்ல , மக்களும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எங்க ? ஏன் ? எதற்கு ? எப்படி ?
(நிறுத்து நிறுத்து , ஏன் இந்த டென்சன் கோபம் )

ஒட்டு போடத்தான் .

இருபது கோடி செலவு செய்து வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர் ,
என்ன செய்வார் ?
????????
( ம் ம்ம்ம்ம்.... தெருவுல நாய்
குறைக்கும் போது , பக்கத்து கோயில்ல உண்ட கட்டி வாங்கி சாப்புடுவாறு)

இவற்றை சரி செய்ய என்ன வழி?

(ஒன்னியும் பன்னமுடியாது .
)

சட்டத்தை கடுமையாக்கனும்.

அது அவ்வளவு சாதாரணமாக முடியாது
, ஏன் ?

வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும் , நமக்கு பிறந்ததிலிருந்து உணவு , உடை , தங்குமிடம் , பாசம் அனைத்தும் தானாகவே கிடைத்து விட்டன , வளர, வளர நாகரீகம் சொல்லிக்கொடுக்கப்பட்டு எது சரி , எது தவறு , எது குற்றம் என்பது தெளிவாக சொல்லிகொடுக்கபடுகிறது .நமக்கு இந்த கடுமையான சட்டங்கள் பொருந்தும் .

ஆனால் ?????

சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்........

பசி, பசி ,பசி ???


முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )

இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ???????

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ??????

எனவே ஆணிவேரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது ஏன் கருத்து , உடனடியாக முடியாது மிக நீண்ட காலம் ஆகலாம் , அனால் இப்பொழுதே அந்த வேலை ஆரம்பிக்க படவேண்டும் ,

அதை யார் செய்வது ?
வேறு யார் அரசாங்கம் தான் .

எந்த அரசாங்கம் ?
தொகுதிக்கு இருபது கோடி செலவு செய்து வெற்றி பெரும் அரசு.

ஏன் இருபது கோடி செலவு செய்கிறார்கள் ? நம்ம மக்கள் லஞ்சம் கேட்பதால். (பாஸ் முன்னாடி தான் பாஸ் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் , இப்ப எல்லாம் மக்களே கேட்க ஆரம்பிச்சுடாங்க )

பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?
....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை

                                                                                       - மங்குனி அமைச்சர்

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP